கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தப்போவதில்லை ட்ரம்பின் உதவியாளர்களின் தலைவர்

கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தப்போவதில்லை, இது சாதாரண காய்ச்சல்போல் தான் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் உதவியாளர்களின் தலைவரான மார்க் மெடோஸ் கூறி உள்ளார்.

அமெரிக்காவில் இதுவரை 86 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 34 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் மட்டுமே தற்போது வரை தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். ஏறத்தாழ 50 லட்சம் பேர் (49,87,647) தற்போது வரை கொரோனா தொற்றுடன் போராடி வருகின்றனர். இதுவரை 2,25,227 பேர் நாடு முழுவதும் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிக எண்ணிக்கையை அமெரிக்காதான் கொண்டுள்ளது. அதேபோது உயிரிழப்பு விகிதத்திலும் ஐந்தில் ஒரு பங்கை அமெரிக்கா கொண்டுள்ளது.

இந்நிலையில் தொற்று பரவலை அதிபர் தடுக்க தவறிவிட்டார் என ஜனநாயக கட்சியின் சார்பாக அதிபர் வேட்பாளராக போட்டியிடும் ஜோ பிடன் கடுமையாக விமர்சித்திருந்தார். இது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உதவியாளர்களின் தலைவரான மார்க் மெடோஸ் செய்தி நிறுவனங்கள் கேள்வியெழுப்பியபோது, நாங்கள் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தப்போவதில்லை என்றும், ஏனெனில் இது ஒரு சாதாரண காய்ச்சல் போல ஒன்றுதான் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் சிகிச்சைகள் மற்றும் தடுப்பூசிகள் போன்றவை அதனை குறைக்க முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்று வாதிட்டார்.

வரும் நவம்பர் மூன்றாம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மெடோஸ்ஸின் இந்த கருத்து மிகுந்த பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!